இந்தியா - சீனா எல்லையான லடாக்கில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுப் போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரச்சினைகளைத் தீா்க்க மூன்று பேர் அடங்கிய இந்திய அணியொன்று களமிறக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2017ல், இந்தியா - சீன இராணுவம் இடையே மோதல் ஏற்பட்டபோது, பிரச்சனையை தீர்ப்பதில் முக்கிய பங்காற்றிய தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரே மீண்டும் களமிறங்கியுள்ளனா்.
இந்தியா - சீனா எல்லையான லடாக்கில் இந்திய இராணுவம் வீதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சீனா தன் படைகளை அனுப்பி எல்லையில் குவித்துள்ளது.
இதனையடுத்து இந்தியாவும் இராணுவத்தினரை எல்லையில் குவித்து வருகிறது.
இரு நாட்டு படைகளும் இந்திய – சீனா எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்கட்கிழமை முக்கிய தரப்பினரை அழைத்து ஆராய்ந்தாா்.
இந்தக் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த, 2017 இல் டோக்லாம் பகுதியில் இந்திய – சீன இராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு, 73 நாட்கள் இரு நாட்டு படைகளும் முகாமிட்டன.
அதன்பிறகு, துாதரக மற்றும் இராணுவம் மூலம் நடத்தப்பட்ட பேச்சில் பிரச்சனைக்கு சுமுக தீர்வு காணப்பட்டது. அப்போது, வெளியுறவுத் துறைச் செயலராக ஜெய்சங்கர் இருந்தார். பிபின் ராவத் ,ராணுவத் தளபதியாக இருந்தார். இவர்களுடன், அஜித் தோவலும் சேர்ந்து, அப்போது தீர்வு கண்டனர்.
இந்நிலையிலேயே பிரச்சினைகளுக்கு சுமூகத் தீா்வு காணும் நோக்கில் இந்தக் குழுவை மோடி மீண்டும் களமிறக்கியுள்ளார்.
இதேவேளை, ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை ஆரம்பித்தாலும் இந்தியா தனது படைகளையும் எல்லையில் தயாா் நிலையில் வைத்துள்ளது.