வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கான விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
29/05/2020 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் நுழைவு இலக்கத்தை பெற்று விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வதற்கான நேர ஒதுக்கீட்டை பெறவும்.
அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் 01/06/2020 இல் காலை 9.00 முதல் வழங்கப்படும்.
கொரோனா நோய் தொற்றுக்கால சமூக இடைவெளியை பேணும் முகமாக இந்நடைமுறையை கைக்கொள்ளுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல் விடுக்கின்றேன் என தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா