மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செல்வாக்கு இழந்துவருவதன் காரணமாகவே அவர்கள் தேர்தல் தேவையில்லையென்று கூறிவருவதாக பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நாடு ஒரு தரமான ஜனாதிபதியை பெற்றுள்ளதன் காரணமாக அவர் பின்னால் செல்ல சிறுபான்மை சமூகம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விரைவாக தேர்தல் நடைபெற்று ஒரு ஸ்திரமான ஆட்சியமையும் போது கடந்த நாலரை வருடத்தில் காணாத அபிவிருத்திகளை கூடிய விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் அமைப்பாளர் தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு