Friday 19th of April 2024 03:16:19 PM GMT

LANGUAGE - TAMIL
ஆறுமுகன் தொண்டமான்
சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்!

சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்!


அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊருக்கு விசேட உலங்குவானூர்தியில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட உலங்குவானூர்தியில் இன்று காலை கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலை எடுத்துச் சென்ற உலங்குவானூர்தி, கம்பளையில் மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் இறம்பொடை, வேவண்டனுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள் மக்கள் அஞ்சலியுடன் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE