Thursday 25th of April 2024 07:11:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியா வாணி வித்தியாலத்தில் சிரமதானம் முன்னெடுப்பு!

வவுனியா வாணி வித்தியாலத்தில் சிரமதானம் முன்னெடுப்பு!


வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலத்தில் சிரமதானப்பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன், பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஊரடங்குசட்டம் தளர்த்தப்பட்டுவருகின்ற நிலையில் பாடசாலையின் கல்வி செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது.

அதற்கமைய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டால் முன்னெடுக்கப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக வலயகல்வி அலுவலகங்களால் பாடசாலை முதல்வர்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருகட்டமாக பாடசாலைகளை துப்புரவுசெய்யும் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் துப்புரவு பணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE