Thursday 18th of April 2024 10:08:07 PM GMT

LANGUAGE - TAMIL
-
நல்லத்தண்ணி தோட்டத்தில் மீட்கப்பட்ட  அரியவகை கருஞ்சிறுத்தை  உயிரிழந்தது!

நல்லத்தண்ணி தோட்டத்தில் மீட்கப்பட்ட அரியவகை கருஞ்சிறுத்தை உயிரிழந்தது!


லக்ஸபானா - நல்லத்தண்ணி தோட்டத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அரிய வகை கருஞ்சிறுத்தை உடவலவா மிருக வைத்தியசாலையில் இன்று உயிரிழந்தது.

இந்தக் கரு்ஞ்சிறுத்தை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் 26 ஆம் திகதி மீட்கப்பட்டது. பின்னா் சிகிச்சைக்காக ரந்தனிகல மிருக வைத்தியசாலையில் இச்சிறுத்தை ஒப்படைக்கப்பட்டது.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உடவலவா மிருக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அது இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடலில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாகவே இந்தக் கருஞ்சிறுத்தை இறந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனா்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE