உலகின் அதிக வயதான மனிதர் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற இங்கிலாந்தைச் சோ்ந்த பாப் வெய்டன் 112 ஆவது வயதில் நேற்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் வயதான நபராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் பாப் வெய்டன் இடம்பெற்றார்.
இந்த நிலையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாப் வெய்டன் உயிரிழந்ததாக அவர்களது குடும்பத்தினர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
பாப் வெய்டன் இறந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவர் எங்களுக்கெல்லாம் உதாரணமாக இருந்தார். அவர் அரசியல், சுற்றுச் சூழல் அனைத்திலும் ஆர்வமாக இருந்தார். நட்பாக இருப்பார் என குடும்பத்தினா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப் வெய்டன் வடக்கு இங்கிலாந்தில் 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி பிறந்தார். அவருக்கு 7 பிள்ளைகள் உள்ளனர்.
Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து