Friday 19th of April 2024 11:06:44 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவிலிருந்து மீண்ட மகிழ்ச்சியை  பியர் பருகிக் கொண்டாடிய 103 வயதுப் பாட்டி

கொரோனாவிலிருந்து மீண்ட மகிழ்ச்சியை பியர் பருகிக் கொண்டாடிய 103 வயதுப் பாட்டி


அமெரிக்கா-மாசசூசெட்ஸ் நகரில் உள்ள மருத்துவ பராமரிப்பு மையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி கிசிச்சை பெற்றுவந்த 103 வயதுப் பாட்டி 3 வார சிகிச்சையின் பின் தொற்றுநோயில் இருந்து குணமடைந்துள்ளாா்.

முழுமையாக குணம்அடைந்த ஜென்னி ஸ்டெஞ்னா என்ற பாட்டி சாவில் இருந்து மீண்ட சந்தோசத்தை பியா் அடித்துக் கொண்டாடினாா் .

குணமடைந்தத்தைக் கொண்டாட பியா் கேட்ட பாட்டியின் கோரிக்கையை ஏற்ற மருத்துவ மையப் பணியாளா்கள் அவா் பியா் குடிப்பதை படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனா்.

இப்போதுபாட்டியின் கதையும் படமும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப்பரவி வருகிறது.

பாட்டிக்கு இறுதி விடை கொடுக்கக் காத்திருந்த அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அவா் மீண்டு வந்துள்ளது கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனா்.கடந்த13ஆம்திகதி நோயில் இருந்து குணமடைந்தபாட்டி விடுவிக்கப்பட்டாா்.


Category: செய்திகள், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE