இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொற்றுநோயியல் பிரிவினர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
நேற்று வரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1558 ஆக காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய அறிவிப்பினை அடுத்து எண்ணிக்கை 1559 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 781 பேர் முழுமையான குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை