Thursday 25th of April 2024 11:53:07 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 938 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு 160 ஆக அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 938 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு 160 ஆக அதிகரிப்பு!


தமிழ்நாட்டில் இன்று (மே-30) 938 பேருக்கு புதிதாக கொரோன தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 21 ஆயிரத்து 184 ஆக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகூடிய தொற்று தினசரி பதிவாகிவரும் நிலையில் இன்றும் 616 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 119 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதை அடுத்து தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 160 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 12 ஆயிரம் பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். அதே வேளை 9 ஆயிரத்து 21 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகினர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE