இன்று புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளானதாக எண்மர் இனம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அவ்வாறு இனம் காணப்பட்ட எண்மரில் ஐவர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்றும், ஏனைய மூவர் அண்மையில் மாலைதீவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 27 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் அதன்படி தற்போது வரை 781 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நாட்டில் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை