Friday 29th of March 2024 01:29:30 AM GMT

LANGUAGE - TAMIL
-
வடமராட்சி குண்டுவெடிப்புச் சம்பவம்; பிரதான சந்தேக நபரை பிடித்தது இராணுவம்?

வடமராட்சி குண்டுவெடிப்புச் சம்பவம்; பிரதான சந்தேக நபரை பிடித்தது இராணுவம்?


யாழ்ப்பாணம் வடமராட்ச்சி வல்லிபுராழ்வார் கோவிலுக்கு அண்மையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த பிரதான சந்தேக நபர் இராணுத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் துன்னாலை குடவத்தை என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் நீண்டகாலமாக பொலிஸாருடன் முரண்டுபட்டுவந்தவர் என்றும் சொல்லப்படுகின்றது.

இராணுவத்தினர் தாம் பிடித்த குறித்த சந்தேக நபரை குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று முன்தினமும் குறித்த சந்தேக நபருக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கரவெட்டி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE