மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை யானை தாக்கி இருவர் காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
நேற்று மாலை 6 மணியளவில் ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியையே வீதியோரத்தில் நின்ற யானை மிதித்து தாக்கியுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையும் மகளும் காயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது.