எலான் மஸ்க்கின் "ஸ்பேஸ்எக்ஸ்" தனியார் நிறுவனம் தயாரித்த ரொக்கெட் -2 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் அமெரிக்காவிலிருந்து நாசா சர்வதேச விண்வெளி மையத்துக்கு நேற்றுப் புறப்பட்டுச் சென்றது.
எதிா்கால வர்த்தக ரீதியான விண்வெளி பயணத்துக்கான முன்மாதிரியாக இந்த பயணம் அமைந்து புதிய வரலாறு படைத்துள்ளது.
விண்வெளிக்கு இதுநாள் வரை எந்த தனியார் நிறுவனமும் மனிதர்களை அனுப்பியதில்லை. வரலாற்றிலேயே முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையை “எலான் மஸ்க்கிற்கு சொந்தமான " ஸ்பேஸ்எக்ஸ்"நிறுவனம் பெற்றது.
இதற்கு முன் மனிதர்களை விண்ணுக்கு அமெரி்க்கா, ரஷ்யா, சீனா அரசுள் மட்டுமே அனுப்பி இருந்தன. முதல்முறையாக தனியார் நிறுவனம் மனிதர்களை அனுப்பியுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் ன் ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அமெரிக்க மண்ணிலிருந்து ரொக்கெட்டை அனுப்பவில்லை. ஏறக்குறைய 10ஆண்டுக்குப்பின் அமெரி்க்க மண்ணிலிருந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் நாசாவுக்கு முதல்முறையாக ஸ்பேக்எக்ஸ் ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
ப்ளோரிடாவில் உள்ள கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இரு மனிதர்களைச் சுமந்துகொண்டு அமெரிக்க நேரப்படி நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.22மணிக்கு விண்ணில் ரொக்கட் செலுத்தப்பட்டது.
“என்னுடையது மட்டுமல்லாமல் ஸ்பேஸ்எக்ஸ்ஸி்ல் உள்ள ஒவ்வொருவரின் கனவும் உண்மையாகி இருக்கிறது” என இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.
இந்த கொக்கெட்டில் நாசா விண்வெளி வீரர்களான அமெரி்க்காவைச் சேர்ந்த பாப் பெக்கென்(49), டாக் ஹர்லி(53) இருவரும் பயணித்தனர். இந்த ரொக்கெட் 19 மணிநேரம் விண்ணில் பயணித்து விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள நாசா விண்வெளி மையத்தை சென்றடையும்.
கடந்த வாரமே இந்த ரொக்கெட் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று ரொக்கெட் புறப்படும் முன் அதில் பயணிக்கும் இரு விண்வெளி வீரர்களுடனும் ஜனாதிபதி ட்ரம்ப் பேசினார். மேலும் ரொக்கெட் வெற்றிகரமாகச் சென்றபின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்கிடமும் ட்ரம்ப் பேசினார்.