கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக உள்ளுர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தடைசெய்யப்பட்ட நிலையில் நாளை (ஜூன்-1) முதல் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச்-13ம் திகதி முதல் உள்ளுர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டதையடுத்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த நிலையில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் முகமாக மீண்டும் பயிற்சியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் விதித்துள்ள சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி இப்பயிற்சி நடைபெறவுள்ளது.
இதற்கமைவாக தெரிவு செய்யப்பட்ட 13 வீரர்கள் நாளை கொழும்பு சி.சி.சி மைதானத்தில் 12 நாட்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாடு சபை அறிவித்துள்ளது.
இவ்வாறு பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியபளர்கள் என அனைவரும் ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கபடப்டு தங்கு முகாம் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்கவைக்கப்பட உள்ள ஹோட்டலில் வீரர்களுக்கான உடற்தகுதி சோதனை நாளை மேற்கொள்ளப்பட்டு நாளை மறுநாள் (ஜூன்-2) மைதானத்தில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மேலும் தெரிவித்துள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை, கொழும்பு