"பொசன் போயா தினத்துக்குப் பின் நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது."
- இவ்வாறு அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரமும் சமூகத்துக்குள் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தையும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமுல்படுத்தப்படும் ஊரங்குச் சட்டத்தையும் நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் பஸில் ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை ஜுன் மாதம் 4, 5ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.