Thursday 18th of April 2024 06:08:18 PM GMT

LANGUAGE - TAMIL
-
நொச்சிமோட்டை பாலத்திற்கு விடிவு!

நொச்சிமோட்டை பாலத்திற்கு விடிவு!


வவுனியா நொச்சிமோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு பாலம் நிரந்தரமான பாலமாக அமைக்கும் பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் நொச்சிமோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பினாலான தற்காலிக பாலம் அடிக்கடி சேதமடைவதும், சேதமடைந்தபகுதி மாத்திரம் திருத்தப்பட்டுவருவதுமான நிலை நீடித்துவந்தது.

பாலத்தினை நிரந்தரமான பாலமாக அமைப்பதற்கு அரசினால் நிதி ஒதுக்கப்பட்டநிலையில் கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக பாலம் அமைக்கும் பணிகள்ஆரம்பிக்கப்படாமல் இருந்தது.

தற்போது ஊரடங்குசட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அதனை அமைக்கும் பணிகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வருடங்கள் ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மற்றும் தென்பகுதிகளில் இருந்து A9 பிரதான வீதி வழியாக யாழ்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கு செல்லும் ஆயிரணக்கணக்கான வாகனங்களினதும், பயணிகளதும் பிரதான போக்குவரத்து மார்க்கமாக குறித்த பாலம் காணப்படுகிறது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE