இலங்கையில் இன்று (மே-31) புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 62 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 1,620 ஆக அதிகரித்திருந்தது.
இந்நிலையில் இன்று புதிதாக மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 1,628 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை இன்று மேலும் 20 பேர் சிகிச்சையின் பின்னர் குணமாகி திரும்பியுள்ளதையடுத்து மொத்த குணமானவர்களது எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 809 பேர் நாடு முழுவதும் உள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை