தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் இன்று என்றுமில்லாதவாறு உச்சம் தொட்டு ஆயிரத்து 149 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் மொத்த பாதிப்பு 22 ஆயிரத்து 333 ஆக உயர்வடைந்துள்ளது.
சென்னையில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாடு கொரோனா பாதிப்பு அதிகரித்த மாநிலமாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் இன்றும் 804 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதையடுத்து சென்னையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 14 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மொத்த உயிரிழப்பு 173 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுனக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பியவர்களது எண்ணிக்கை 12 ஆயிரத்து 757 ஆக உள்ள நிலையில் இதுவரை 9 ஆயிரத்து 400 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை