சோமாலிய தலைநகர் மொகாடிஷு அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை வீதியோரத்தில் இருந்த குண்டு வெடித்ததில் மினி பஸ் ஒன்றில் சென்ற 6 போ் உயிரிழந்தனா்.
மொகாடிஷுவிலிருந்து வடமேற்கே 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹவா அப்தி கிராமத்தில் மினி பஸ் சென்றுகொண்டிருந்தபோது வீதியில் இருந்த குண்டு வெடித்தது.
இதில் இறுதிச் சடங்கு ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்தவா்கள் பலியாகினா். குண்டுவெடிப்பில் சிக்கிய அனைவரும் நெருங்கிய உறவுகள் என பொலிஸாா் தெரிவித்தனா்.
இந்தக் குண்டுவெடிப்பில் சிக்கி மேலும் சிலா் படுகாயமடைந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என பொலிஸ் அதிகாரி ஃபராஹன் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளாா்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்வொரு அமைப்பும் உரிமை கோரவில்லை.