இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1633 ஆக அதிகரித்துள்ளது.
இந்தத் தகவலை இலங்கை தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
தற்போது 812 பேர் நாடு முழுவதும் உள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை