உயிரிழந்த இலங்கைத் தொழிலாளா் காங்கிரஸ் தலைவா் ஆறுமுகன் தொண்டமான் வசமிருந்த சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று பொறுப்பேற்றாா்.
இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மகிந்த இந்த அமைச்சுக்களைப் பொறுப்பேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மறைவையடுத்து இந்த அமைச்சுப் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
இந்த பதவிப் பிரமாணத்தின்போது ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவும் பிரசன்னமாகியிருந்தார்.