இலங்கை பொதுத்தேர்தல் திகதி தொடர்பான வழக்கின் முக்கிய தீர்ப்பு நாளை அறிவிக்கப்பட உள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், பொதுத் தேர்தல் தொடர்பில் மாற்று திகதியை முன்வைக்க உள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஜூன்-20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதா இல்லையா என நாளை அறிவிக்க உள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (ஜூன்-1) தெரிவித்திருந்தது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினால் நாளை (ஜூன்-2) மாலை 3.00 மணிக்கு குறித்த தீர்மானத்தை அறிவிக்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவத்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இது தொடர்பாக தெரிவிக்கையில், தேர்தலுக்கு பொருத்தமான திகதியை நியமிப்பதில் சட்டரீதியான ஆட்சேபனை இல்லை என்றால், தேர்தல் ஆணையம் மற்றொரு திகதியை முன்வைக்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, கொழும்பு