Friday 29th of March 2024 06:03:57 AM GMT

LANGUAGE - TAMIL
-
சிங்கப்பூரில் தங்கியிருந்த இலங்கையர் 291 பேர் நாடு திரும்பவுள்ளனர்!

சிங்கப்பூரில் தங்கியிருந்த இலங்கையர் 291 பேர் நாடு திரும்பவுள்ளனர்!


கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர்.

அதற்கமைய அங்கு தங்கியுள்ள 291 பேர் இவ்வாறு இன்று நாடு திரும்பவுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமையும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகும்.

இலங்கை அரசாங்கம் தமது நாட்டுப் பிரஜைகளை ஏனைய நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலம் தொடர்ச்சியாக அழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE