கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சர்வதேச போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதால் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த 700 இந்தியர்களை ஏற்றியவாறு நேற்று மாலை கொழும்பில் இருந்து புறப்பட்டது ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல்.
இலங்கையில் தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்வதற்காக இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்” நடவடிக்கையின் கீழ் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்துகொண்ட சுமார் 700 பேர் இவ்வாறு நேற்றைய தினமே இக்கப்பலில் அழைத்து செல்லப்பட்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை, கொழும்பு