இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் எட்டாயிரத்து 170 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்கியுள்ளது.
ஐந்தாம் கட்டமாக ஊரடங்கு நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணிரேநத்தில் மட்டும் 8,170 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதையடுத்து மொத்த தொற்றளர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 204 பேர் உயிரிழந்ததுள்ளதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 5,598 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 3,708 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ள நிலையில் இதுவரை 95,527பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 97,581 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 70,013 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 23,495 பேருக்கும், டெல்லியில் 20,834 பேருக்கும், குஜராத்தில் 17,200 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), தமிழ்நாடு, புது தில்லி