அமெரிக்க – ஆப்பிரிக்கரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட் படுகொலைக்கு கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவின் கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனத்தின் பக்கங்கள் மூலம் கறுப்பின சமூகத்துடன் ஒற்றுமையையும் இன சமத்துவத்திற்கான எங்கள் ஆதரவை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் என ருவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் அவா் கூறியுள்ளாா்.
ஜோர்ஜ் ஃப்ளாய்ட், பிரயோன்னா டெய்லர், அகமது அர்பெரி, உள்ளி்ட்டோருக்கும், வலுவாக ஆதரவு குரல் எழுப்பமுடியாதவர்களையும் இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து ஆதரவு தெரிவிக்கிறோம்.
யாரெல்லாம் துக்கமாகவும், கோபமாகவும் , அச்சமாகவும், வேதனையுடனும் இருக்கிறார்களோ அவர்கள் தனியாக இல்லை எனவும் சுந்தா் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
ஜோர்ஜ் ஃப்ளாய்ட்கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு மைக்ரோசொஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளவும் ருவி்ட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நம்முடைய சமூகத்தில் இனவெறிக்கும், வெறுப்புக்கும் ஒருபோதும் இடமில்லை. இரக்கம் மற்றும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல்தான் மற்றவர் மீதான அக்கறையின் தொடக்கம். இதை நாம் அதிகமாகச் செய்ய வேண்டும்.
அமெரிக்க - ஆப்பிரிக்க மக்களுக்காகவும் கறுப்பின மக்களுக்காவும் நான் ஆதரவாக இருப்பேன். நம்முடைய சமூகத்தையும், இந்த நிறுவனத்தையும் கட்டமைக்க அவர்களும் கடமைப்பட்டுள்ளார்கள், உறுதுணையாக இருந்துள்ளார்கள் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.