கிளிநொச்சி ஆனந்த புரம் பகுதியில் சூட்சுமமான முறையில் வளர்க்கப்பட்ட சுமார் 4.5 அடி உயரம் கொண்ட 09 கஞ்சா செடிகள் கிளிநொச்சிப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நகரை அண்மித்த ஆனந்த புரம் பகுதியில் மேற்படி கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதீபன் அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து இன்று (04) மேற்கொண்ட நடவடிக்கையின் போது மிகவும் சூட்சுமமான முறையில் வீட்டுவளவில் வளர்ப்பட்ட சுமார் 4.5 அடி உயரம் கொண்ட 09 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதே வேளை குறித்த இச்செடிகளை வளர்த்த சந்தேகத்தில் ஒருவர் கிளிநொச்சிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி