Thursday 28th of March 2024 04:39:14 AM GMT

LANGUAGE - TAMIL
வெல்லவாயவில்
பாவனைக்கு உதவாத கோழி இறைச்சிகளை விற்க முற்பட்டவர் கைது!

பாவனைக்கு உதவாத கோழி இறைச்சிகளை விற்க முற்பட்டவர் கைது!


பாவனைக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சிகளை விற்பனை செய்ய முற்பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாவனைக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சிகளை மொத்தமாக விற்பனைக்கு எடுத்துச் சென்ற வேளையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 100 கிலோ கிராம் கோழி இறைச்சி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பார ஊர்தியில் சென்று அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய முற்பட்ட போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விற்பனை செய்த கோழி இறைச்சி பைக்கற்றில் உற்பத்தி திகதி மற்றும் காலாவதி திகதி என்பன குறிப்படப்படாது விற்பனை செய்யப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி காவல்துறையினரது முன்னிலையில் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE