கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதாக இருந்த ஐதராபாத் ஓபன் பேட்மின்டன் தொடரும் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக பேட்மிண்டன் பெடரேசன் முக்கியமான தொடர்களின் போட்டி ஆட்டவணையை மாற்றி அமைத்தது. அதன்படி ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதம் பேட்மிண்டன் தொடரை நடத்த சாத்தியமில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உலக பேட்மிண்டன் பெடரேசன் அறிவித்துள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, உலகம்