Saturday 20th of April 2024 04:23:12 AM GMT

LANGUAGE - TAMIL
புஷ்பா திரைப்படத்தில்
5 மொழிகளில் உருவாகும் புஷ்பா திரைப்படத்தில் வில்லியாக ரோஜா மறு அவதாரம்!

5 மொழிகளில் உருவாகும் புஷ்பா திரைப்படத்தில் வில்லியாக ரோஜா மறு அவதாரம்!


நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா, 5 மொழிகளில் உருவாகும் புஷ்பா திரைப்படத்தில் வில்லியாக நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் மூலம் திரையுலகிற்கு மறு அவதாரம் எடுக்க இருக்கிறார்.

90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்த ரோஜா அதன் பின்னரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் அபிமானத்தை பெற்றிருந்த ரோஜா தீவிர அரசியலில் கவனம் செலுத்தியதால் நடிப்புக்கு தற்காலிகமான ஓய்வை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தனது திரையுலக மறு அவதாரமாக 5 மொழிகளில் உருவாகும் புஷ்பா திரைப்படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லொறி டிரைவராக நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை ரோஜா வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் கவனம் செலுத்தி வந்த ரோஜா படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்படத்தின் கதையை கேட்டதும் பிடித்துப்போனதால் உடனே நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது. இப்படம் மூலம் அவர் பவர்புல்லான வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE