சூர்யா நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்காக காத்திருக்கும் 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
சுதா கெங்காராவ் இயக்கத்தில் சூர்யா-அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தின் வெளியீடானது கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டு தாமதமாகியிருந்தது.
தற்போது தமிழ்நாட்டில் ஓரளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் திரைப்பட பணிகளும் ஓரளவு மீளவும் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. அந்தா வகையில் சூரரைப் போற்று திரைப்படத்தை தணிக்கைக் குழுவிற்கு சமர்ப்பித்திருந்தது படக்குழு.
படத்தை பார்வையிட்ட தணிக்கைக் குழுவினர் சூரரைப் போற்று படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து படம் வெளியீட்டுக்கு தயார் நிலையில் இருப்பதையிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.