ஆகஸ்ட் மாதத்திற்குள் அமெரிக்காவில் 145,728 வரை கொரோனா வைரஸ் தொற்று நோய் உயிரிழப்புக்கள் உயரக்கூடும் என வொஷிங்டன் பல்கலைக்கழகம் மதிப்பிட்டுள்ளது.
ஒரு சில நாட்களில் நாட்டில் 5,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகலாம் எனவும் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் எச்சரித்துள்ளனா்.
ஆகஸ்ட் மாதத்தில் 140,496 கோவிட்-19 மரணங்கள் அமெரிக்காவில் பதிவாகக் கூடும் என வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகம் மதிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இந்த மதிப்பீடு மீண்டும் திருத்தப்பட்டு 145,728 ஆக உயிரிழப்புக்கள் பதிவாகக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இறப்பு எண்ணிக்கை மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் திருத்தத்திற்கான காரணத்தை ஆய்வாளா்கள் தெரிவிக்கவில்லை.
டெக்சாஸ் மாகாணத்தில் அண்மையில் எண்ணிக்கையிலானவா்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே வேளை, ஏனைய 22 அமெரிக்க மாகாணங்களில் புதிய உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளா்களின் எண்ணிக்கையில் சற்று சரிவு ஏற்பட்டிருந்ததாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளது.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் தரவுகளின் பிரகாரம் மிச்சிகன் மற்றும் அரிசோனா ஆகியவை புதிய தொற்று நோயாளா் தொகையில் கூர்மையான அதிகரிப்புகளைக் கொண்ட மாநிலங்களாக உள்ளன. அதே நேரத்தில் வர்ஜீனியா, ரோட் தீவு மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்களில் தொற்று நோயாளா் எண்ணிக்கை பெரும் சரிவைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜோர்ஜ் ஃபிலாய்டின் கொலைக்கு எதிராக அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் போராட்டங்களில் பெரும் தொகையானவா்கள் ஒன்றுகூடி வருவதால் புதிய தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தொற்று நோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனா்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா