Wednesday 24th of April 2024 08:43:27 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் புதிய  கொரோனா தொற்று பரவலால் அச்சம்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் புதிய கொரோனா தொற்று பரவலால் அச்சம்!


சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று சனிக்கிழமை 6 போ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நேற்று வெள்ளிக்கிழமை அங்கு 2 புதிய தொற்று நோயாளா்கள் கண்டறியப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் புதிய தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு தொற்று நோயின் புதிய அலை குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில் நேற்று வரையான கடந்த 56 நாட்களாக புதிய தொற்று நோயாளா்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

இந்நிலையில் கடும் கட்டுப்பாடுகளின் மத்தியிலும் பெய்ஜிங்கில் கொரோனா தொற்று பரவியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்கில் புதிதாக நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள சீன இறைச்சி உணவு ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்களாவா்.

இதையடுத்து, பெய்ஜிங்பில் உள்ள இறைச்சி சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டு, பாடசாலைகளைத் திறக்கும் முடிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் பெய்ஜிங்கில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவின் கொரோனா தொற்று நோய் மையமான ஹூபே மாகாணத்தில் கடந்த 24 நாட்களாக புதிய தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. இதனையடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த மாகாண அரசு முடிவு செய்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE