Wednesday 24th of April 2024 05:29:00 AM GMT

LANGUAGE - TAMIL
தமிழ்நாட்டில்
நடிகை ரம்யா கிருஸ்ணன் காரில் இருந்து 100 இற்கு மேற்பட்ட மதுப் போத்தல்கள் பறிமுதல்!

நடிகை ரம்யா கிருஸ்ணன் காரில் இருந்து 100 இற்கு மேற்பட்ட மதுப் போத்தல்கள் பறிமுதல்!


படையப்பா புகழ் நீலாம்பரி ரம்யா கிருஸ்ணனின் காரில் இருந்து 96 பீர் போத்தல்களும், 8 மது போத்தல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அவரது கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தெரிய வருவதாவது,

கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் மதுபானக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு வாகனசோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீஸார், அங்கு வந்த இன்னோவா காரை மறித்து, அதில் இருந்தவர்களிடம் சோதனையிட வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது அந்த காரில் இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் சோதனையிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சோதனையில் அந்த காரில் 96 பீர் போத்தல்களும், 8 மதுப் போத்தல்களும் இருந்துள்ளன. உடனே போலீஸார், இது தொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.

சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் செல்வகுமாரை நடிகை ரம்யாகிருஷ்ணனும் அவரது சகோதரி வினயாகிருஷ்ணனும் ஜாமீனில் அழைத்துச் சென்றனர்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE