Friday 19th of April 2024 11:46:59 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா; இரத்தம் உறைவதைக் கட்டுப்படுத்தும் மருந்து தயாராகிறது!

கொரோனா; இரத்தம் உறைவதைக் கட்டுப்படுத்தும் மருந்து தயாராகிறது!


கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து உயிா்களைக் காப்பாற்ற வழி செய்யும் மருந்தை அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவா் சக விஞ்ஞானிகளுடன் இணைந்து கண்டுபிடித்துள்ளார்.

இன்னும் ஆய்வக சேதனையில் உள்ள இந்த மருந்து கொரோனாவால் இரத்தம் உறைவதை நிறுத்தி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் என அவா் கூறிப்பிட்டுள்ளாா்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கின்றன. உடலில் உள்ள கொரோனா வைரஸ், இரத்தத்தை உறையவைப்பதுதான் மூச்சுத்திணறல் ஏற்படக் காரணம். கொரோனா வைரஸ் இரத்தத்தை உறையவைத்து உடலுறுப்புக்களுக்கான ஒக்ஸிஜன் விநியோகத்தை தடுக்கிறது. இதனால்தான் உடலுறுப்புகள் செயலிழந்து, பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

இதனை கருத்தில் கொண்டே இரத்தம் உறைவதை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் ஷாவுன் ஜாக்ஸன் இறங்கினார் .

தனது குழுவில் உள்ள ஏனைய ஆய்வாளர்களுடன் இணைந்து இரத்தம் உறைவதை தடுக்க மருந்து ஒன்றை அவா் கண்டுபிடித்துள்ளார்.

அந்த மருந்தின் முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றது. இரண்டாம் கட்ட சோதனை நடந்துவருகிறது. இரண்டாம் கட்ட சோதனையும் முடிந்து இன்னும் ஒருசில மாதங்களில் உலகம் முழுவதும் இந்த மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மருந்து சந்தைக்கு வந்துவிட்டால், கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என பேராசிரியர் ஷாவுன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் தேவைப்படாத நிலையை உருவாக்க மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வை முன்னெடுத்தோம். இந்த மருந்து உடலுறுப்புகள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் எனவும் பேராசிரியர் ஷாவுன் ஜாக்ஸன் தெரிவித்துள்ளாா்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE