அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோ்ர்ஜ் ஃபிளாயிட் பொலிஸாரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் இனவெறி்க்கு எதிராகவும் லண்டனில் நேற்று இடம்பெற்ற ஆா்ப்பாட்டம் கலவரமாக மாறிய நிலையில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 100 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
லண்டனில் உள்ள டிராபல்கர் சதுக்கத்தில் இனவெறிக்கு எதிரான போராட்டக்காரர்களும், அவர்களுக்கு எதிராக் திரண்ட குழுவினரும் நேற்று மோதிக்கொண்டனா்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனா்.
அத்துடன் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதுடன், தடியடியும் நடத்தப்பட்டது.
லண்டனில் உள்ள ஆதிக்க சின்னங்களை சேதப்படுத்தும் எண்ணத்துடன் போராக்காரர்கள் நடந்து கொண்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை, வன்முறை - வெறியாட்டங்களுக்கு இங்கு இடமில்லை. மீறி வன்முறையில் ஈடுபடுவோர் பொலிஸார் மூலம் ஒடுக்கப்படுவார்கள் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து