Tuesday 16th of April 2024 01:41:25 PM GMT

LANGUAGE - TAMIL
-
மீண்டும் பரவும் கொரோனா தொற்றால்  சீன தலைநகா் பீஜிங்கில் அசாதாரண நிலை!

மீண்டும் பரவும் கொரோனா தொற்றால் சீன தலைநகா் பீஜிங்கில் அசாதாரண நிலை!


சீன தலைநகா் பீஜிங்கில் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் எவரும் பதிவாகாத நிலையில் கடந்த ஒரு வாரமாக புதிய கொரோனா தொற்று நோயாளா்கள் பதிவாகி வருவது தொற்று நோயின் மீள் எழுச்சி குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

புதிய தொற்று நோயாளா்கள் அனைவரும் பீஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி என்ற ஒரு பெரிய மொத்த உணவுச் சந்தையுடன் தொடா்புடையவா்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் சோதனைகளை அதிகரிப்பது உட்பட தொற்று நோய் மேலும் தடுக்காமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

ஜின்ஃபாடி சந்தைக்குச் சென்றவா்கள் அல்லது அங்கு சென்றவா்களுடன் தொடா்புடைய அனைவரும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தல் இருக்குமாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பீஜிங் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறானவா்கள் தம்மை சுய தனிமைப்படுத்திக் கொள்வதைக் கண்காணிக்கவும் சுகாதாரப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பீஜிங்கில் ஜூன் 12 அன்று புதிய தொற்று நோயாளா் கண்டறியப்படும்வரை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நகரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை. இப்போது அங்கு தொற்று நோயாளா்களின் மொத்த எண்ணிக்கை 50 ஐக் கடந்து அதிகரித்து வருகிறது.

உறுதிப்படுத்தப்பட்ட புதிய தொற்று நோயாளா்கள் அனைவருமே ஜின்ஃபாடி சந்தையுடன் தொடா்புடையவா்களாக உள்ளனா். அங்கு பணியாற்றியவா்கள் மற்றும் அங்கு வந்து சென்றவா்களே என பீஜிங் நகர சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

"பீஜிங் ஒரு அசாதாரண காலகட்டத்துக்குள் தற்போது நுழைந்துள்ளது" என நகர செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியன் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE