ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் இல்லாவிடினும், பொருத்தமற்ற கற்களை கொண்டு அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் தற்போது உள்ள அரசாங்கத்தின் சார்பில் நான் மன்னிப்பு கோருகின்றேன் என அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 2017ம் ஆண்டுஆரம்பிக்கப்பட்ட மாதிரி வீட்டுத்திட்ட கட்டுமான பணிகளில் பொருத்தமற்ற கற்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் கற்கள் தொடர்பில் அங்கயன் இராமநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்.
நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக்கு சென்ற அங்கயன் இராமநாதன், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாதிரி வீட்டுத்திட்டத்தினை பார்வையிட்டார். வீட்டுத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் கற்கள் தரமற்றவை எனவும், அதனால் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் அச்சம் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் அங்கயன் இராமநாதன் குறித்த பகுதிக்கு நேற்று நேரில் சென்று மேற்கொள்ளப்பட்டுவரும் மாதிரி வீட்டுத்திட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார். இதன்போது குறித்த வீட்டுத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட கற்கள் தரமற்றவை எனவும், அதனால் பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் காணப்புடுவதாகவும் மக்கள் அங்கயன் இராமநாதனிடம் முறையிட்டனர்.
குறித்த விடயம் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் மற்றும், பொறுப்பாக வீட்டுத்திட்டத்தினை முன்னெடுத்து செல்லும் நிறுவனத்தினருடன் அங்கயன் இராமநாதன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொ்ணடு மக்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பேசினார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவு்ம. ஒரு மாத காலத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொண்டு கொடுக்கப்படும் எனவும் அங்கயன் இராமநாதனிற்கு உறுதி அளிக்கப்பட்டது.
குறித்த வீட்டுத்திட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இவ்வாறான குறைபாடுகள் தொடர்ந்தும் காணப்படுகின்றமை தொடர்பில் மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்துள்ளனர். இவ்வாறான நிலையில் குறித்த வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை தமது அரசாங்கம் பொறுப்பு ஏற்று, பாதிக்கப்பட்ட மக்களிற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்போம் என அங்கயன் இராமநாதன் மக்களிற்கு தெரிவித்துள்ளார்.
அவர்களின் வாக்குறுதிக்கு அமைவாக ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் எனவும். கடந்த காலத்தில் இடம்பெற்ற இவ்வாவான குறைபாடுகளிற்கு அந்த அரசாங்கம் ஆட்சியில் இல்லாவிடினும் அரசாங்கம் சார்பாக மன்னிப்பு கோருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
Category: உலகம், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி