Thursday 28th of March 2024 07:32:17 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா 2வது அலை: சீனாவில் பள்ளிகள் மூடப்பட்டது, விமானங்கள் ரத்து!

கொரோனா 2வது அலை: சீனாவில் பள்ளிகள் மூடப்பட்டது, விமானங்கள் ரத்து!


சீனாவில் கொரோனா 2வது அலை தாக்கியுள்ளதன் எதிரொலியாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதுடன் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுள்ளது.

சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கொரோனா பரவிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது இரண்டாவது அலையாகத் தலைநகர் பிஜிங்கில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் கொரோனா பரவியது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் எட்டாயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் 137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (ஜூன்-17) காலை நிலவரப்படி பீஜிங்கில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பீஜிங்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பள்ளிகள் அனைத்தையும் மூடியுள்ளதுடன், 1255 விமானங்களையும் சீனா ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE