Tuesday 16th of April 2024 11:17:40 AM GMT

LANGUAGE - TAMIL
கோட்டாபய ராஜபக்சே
பொதுத் தேர்தல்-2020 குறித்து கோட்டா வழங்கிய உறுதி!

பொதுத் தேர்தல்-2020 குறித்து கோட்டா வழங்கிய உறுதி!


இலங்கை பொதுத் தேர்தல்-2020 குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற முக்கிய சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய உறுதி மொழி வழங்கியுள்ளார்.

சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான சூழலை ஏற்படுத்தி தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடையே இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற (ஜூன்-17) கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடக்கவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

இவ்வாறு தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி இடையில் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE