Friday 29th of March 2024 05:27:36 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிரிட்டிஷ் பிரதமா் ஜோன்சன் காரின் முன்பு  திடீரென பாய்ந்த நபரால் பரபரப்பு!

பிரிட்டிஷ் பிரதமா் ஜோன்சன் காரின் முன்பு திடீரென பாய்ந்த நபரால் பரபரப்பு!


பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கார் பாராளுமன்றத்திற்கு வெளியேநேற்று சிறிய விபத்தில் சிக்கியது. எனினும் இதில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே நேற்று சில குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. குர்திஷ் ஆதரவு குழுக்கள், பிரக்சிட் எதிர்ப்பு குழுக்கள் என பல தரப்பினரும் குறைவான பங்கேற்பாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில் பாராளுமன்றம் வந்த பிரதமர் போரிஸ் ஜோன்சன் அங்கு பணிகளை முடித்துக்கொண்டு பிரதமர் அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டார்.

ஜோன்சனின் கார் பாராளுமன்றத்தை விட்டு வெளியே வந்தபோது அங்கு கூடியிருந்த குா்திஷ் ஆதரவு போராட்டக்காரர்களில் ஒருவர் சுலோக அட்டையுடள் திடீரென பிரதமரின் காரின் முன்பாய்ந்தாா்.

இதனால் பிரதமரின் காா் சடுதியாக நிறுத்தப்பட்டபோது பின்னா் வந்துகொண்டிருந்த பாதுகாப்பு அணி வாகனம் பிரதமா் காருடன் மோதியது.

இதனால் பிரதமா் ஜோன்சன் பயணித்த காரின் பின்பகுதி சிறிய சேதமடைந்தது.

இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பிரதமர் சென்ற காரை இடைமறித்து விபத்து ஏற்பட காரணமாக இருந்த குா்திஷ் ஆதரவுக் குழுவைச் சோ்ந்தவரைக் கைது செய்தனர்.


Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE