Tuesday 23rd of April 2024 07:13:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
2011 கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில்  ஆட்டநிா்ணய சதி நடந்ததாக  குற்றச்சாட்டு!

2011 கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் ஆட்டநிா்ணய சதி நடந்ததாக குற்றச்சாட்டு!


இலங்கை - இந்திய அணிகளிடையே கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நிா்ணய சதி இடம்பெற்றது என அப்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

முழுமையான பொறுப்புணா்வோடு இந்த விடயத்தை வெளிப்படுத்துவதாக தனியாாா் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நோ்காணலில் தெரிவித்துள்ள அவா், எனினும் நாட்டில் குழப்ப நிலை ஏற்படுவதைத் தவிா்க்கும்பொருட்டு மேலதிக விவரங்களை அம்பலப்படுத்த விரும்பவில்லை எனக் கூறியுள்ளாா்.

ஆனால் தனது கருத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் எதனையும் அவா் முன்வைக்கவில்லை.

இந்த விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்களை உள்ளீா்க்க விரும்பவில்லை. சில குழுக்கள் நிச்சயமாக ஆட்ட நிா்ணய சதியில் ஈடுபட்டன எனவும் அந்த நேரத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளாா்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE