Tuesday 23rd of April 2024 03:04:36 PM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் இன்று 2141 புதிய தொற்று: உயிரிழப்பு 625 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று 2141 புதிய தொற்று: உயிரிழப்பு 625 ஆக உயர்வு!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று என்றும் இல்லாத அளவுக்கு புதிய உச்சம் பெற்று இன்றும் 49 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2141 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக இரண்டாயிரத்து 141 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை கடந்து 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இன்று 49 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 625 ஆக உயர்வடைந்துள்ளது. சென்னையில் மட்டும் 501 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்றும் 1373 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதை அடுத்து இதுவரை சென்னையில் மட்டும் 37 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 28 ஆயிரத்து 641 பேர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 23 ஆயிரத்து 65 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE