2011ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ள விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி வீரர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில், விசாரணைகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்க்ப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை