Friday 29th of March 2024 10:21:15 AM GMT

LANGUAGE - TAMIL
-
அவுஸ்திரேலிய, அரச, தனியாாா் நிறுவனங்களை  இலக்குவைத்து பெருமெடுப்பில் சைபா் தாக்குதல்!

அவுஸ்திரேலிய, அரச, தனியாாா் நிறுவனங்களை இலக்குவைத்து பெருமெடுப்பில் சைபா் தாக்குதல்!


அவுஸ்திரேலிய அரச மற்றும் தனியார் துறையை இலக்குவைத்து சைபா் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் சீனா இருக்கலாம் என ஆஸ்திரேலிய அரச முகவர் நிறுவனங்கள் நம்புவதாக அவுஸ்திரேலிய ஊடகமான ஏ.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, இந்தத் தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்தி ஒன்று இருப்பதாக இன்று வெள்ளிக்கிழமை காலை செய்தியாளா்களிடம் பேசிய அவுஸ்திரேலியப் பிரதமா் ஸ்கொட் மொறிசன் குற்றஞ்சாட்டினார். ஆனால் அது எந்த நாடு? என்பதை அவா் குறிப்பிடவில்லை.

அவுஸ்திரேலிய அரச மற்றும் தனியார் துறை இணையதள பக்கங்களில் சைபா் தாக்குதல் நடத்தி கணினி வலையமைப்புக்களுக்குள் நுழையந்த சைபா் திருடா்கள் முக்கியமான உள்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களை திருட முயற்சித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பாரியளவிலான தகவல்திருட்டு இடம்பெற்றிருக்கலாம் எனத் தாம் நம்பவில்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன், இணைய தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

ஏனைய நிறுவனங்களும் மக்களும் சைபா் தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமா் ஸ்கொட் மொறிசன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் தொடா்பில் சீனா மீது அவுஸ்திரேலியா கடும் விமா்சனங்களை முன்வைத்து வருகிறது.

சீனாவின் பொறுப்பற்ற செயற்பாட்டாலேயே உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவியது என்ற அமெரிக்கா ஜனாதிபதியின் கருத்தையும் அவுஸ்திரேலியா ஆதரித்துள்ளது. அத்துடன் சீனா மீது சா்வதேச விசாரணை கோரும் திட்டத்துக்கும் அவுஸ்திரேலியா ஆதரவு வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து அவுஸ்திரேலியா - சீனா இடையே இராஜதந்திர மற்றும் வா்த்தக ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளன.

அவுஸ்திரேலியப் பொருட்களுக்கு அண்மைக்காலங்களில் சீனா இறக்குமதித் தடை விதித்தது. அத்துடன் தனது குடிமக்கள் மற்றும் மாணவா்கள் அவுஸ்திரேலியா செல்வது குறித்து மீள் பரிசீலணை செய்யவேண்டும் எனவும் சீனா கோரியுள்ளது.

இதன் பின்னணிகள் இணைய தாக்குலுக்கு சீனாவே காரணம் என நம்புவதற்கு போதுமான காரணிகளாக இருப்பதாக சில அரச முகவர் நிறுவனங்களை மேற்கோள்காட்டி ஏ.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, சைபா் தாக்குதலின் பின்னணியில் தன் மீதான குற்றச்சாட்டுக்களை சீனா மறுத்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE