Wednesday 24th of April 2024 08:27:04 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டை மிரட்டும் கொரோனா: தொடர்ந்து மூன்றாவது நாளாக 2ஆயிரத்தை கடந்த தொற்று!

தமிழ்நாட்டை மிரட்டும் கொரோனா: தொடர்ந்து மூன்றாவது நாளாக 2ஆயிரத்தை கடந்த தொற்று!


தமிழ்நாட்டை மிரட்டிவரும் கொரோனாவின் தாக்குதலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரண்டாயிரத்தை கடந்து புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்றும் புதிதாக இரண்டாயிரத்து 115 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை கடந்து 54 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது. மூன்றாவது நாளாக இன்றும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இன்று 41 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 666 ஆக உயர்வடைந்துள்ளது. சென்னையில் மட்டும் 529 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்றும் 1322 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதை அடுத்து இதுவரை சென்னையில் மட்டும் 38 ஆயிரத்து 327 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 30 ஆயிரத்து 271 பேர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 23 ஆயிரத்து 509 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE