சீனாவில் நேற்று 27 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டனா். அவா்களில் 22 போ் தலைநகா் பீஜிங்கில் பதிவானதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மொத்தம் 32 தொற்று நோயாளா்கள் சீனாவில் உறுதிப்படுத்தப்பட்டனா். அவற்றில் 25 பீஜிங்கில் பதிவாகின.
பீஜிங்கில் மொத்த உணவுச் சந்தை ஒன்றில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடா்ந்து அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
சீனாவில் மற்றொரு அறிகுறியற்ற கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் 7 போ் ஜூன் -19 கண்டறியப்பட்டனா். இந்த நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளிகளாகக் கணக்கிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா