Friday 19th of April 2024 08:17:53 PM GMT

LANGUAGE - TAMIL
-
மணல் ஏற்றச் சென்றவர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம்! கிளாலிப் பகுதியில் சம்பவம்!

மணல் ஏற்றச் சென்றவர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம்! கிளாலிப் பகுதியில் சம்பவம்!


கிளிநொச்சி மாவட்டம் கிளாலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் படையினர் நடத்தியதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்றில் படுகாயம் அடைந்திருப்பதாக பளையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உழவியந்திரம் ஒன்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர்களே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயம் அடைந்த அவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு வைத்தியர் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் துப்பாக்கிப்பிரயோகத்தில் ஆபத்தான நிலையினை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் குறித்த தகவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலதிக தகவல் விரைவில் அருவியில்..


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE