Saturday 20th of April 2024 04:28:38 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிரிட்டன்  ரெடிங்கில்  மூவா் குத்திப் படுகொலை!

பிரிட்டன் ரெடிங்கில் மூவா் குத்திப் படுகொலை!


பிரிட்டனின் தென்புற நகரான ரெடிங்கில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில், மூவர் கொல்லப்பட்டதுடன், ஆறு போ் காயமடைந்தனா். இவா்களில் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.

ரெடிங்கின் நகர மையத்தில் உள்ள ஃபோர்பரி கார்டனில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கத்திக்குத்துத் தாக்குதல் ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதப்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்திற்கான பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக ரெடிங் நகர துப்பறியும் தலைமை கண்காணிப்பாளர் இயன் ஹண்டர் கூறினார்.

இந்தக் கத்திக் குத்துத் தாக்குதல் தொடா்பில் 25 வயதான ஒருவா் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு மேலும் ஆபத்து எதுவும் இருப்பதாக உளவுத் துறை தகவல்கள் ஏதும் இல்லை. இருப்பினும் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக ரெடிங் நகர பொலிஸாா் எச்சரித்துள்ளனா். சந்தேகத்துக்கிடமாக நபா்கள் அல்லது சம்பவங்கள் தொடா்பில் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, கத்திக் குத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபா் லிபியாவைச் சோ்ந்தவா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்திக் குத்துத் தாக்குதலைின்போது ரெடிங்கின் நகர மையத்தில் உள்ள ஃபோர்பரி கார்டனில் கூடியிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியதாகவும் பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸாா் கொலைச் சந்தேகநபரை பிடித்து நிலத்தில் தள்ளி விழுத்திக் கைது செய்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தவா்கள் தெரிவித்துள்ளனா்.


Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE